Wednesday, November 6, 2013

போராடப்போவதில்லை


என்றேனும் ஓர் நாள்
உயிரின் கீதம்
முடிந்து போகலாம்

அந்த ஓர் நாள் ...
மறுநொடியாகவோ
மறுநாளாகவோ
இருக்கலாம்

கரைந்த உயிரின்கீதத்தில்
எனக்கானவை முற்றிலும்
இல்லாமல் போகலாம்

பாதியில் நிற்கும்
அன்பும், வெறுப்பும்
அநாதையாகலாம்

எண்ணங்கள் எங்கேனும்
மறைந்து போகலாம்
யாரோ ஒருவரின்
எண்ணமாக புதுபிறவியும்
எடுக்கலாம் அடையாளத்தோடு

கரைவதற்காவும்
மறைவதற்காகவும்
ஆனவற்றிக்காக
போராடப்போவதில்லை
எந்நாளும் பிரபஞ்சத்தில்

No comments:

Post a Comment