Wednesday, November 6, 2013

அவள்


வேகமாக நகர்கையில்
அதிகமாய் ஓர் நொடி
பதிந்தது அவள்மீது கண்கள்
ஏதோ கவன ஈர்ப்பால்

பதித்த கண்கள் அவசரமாக
பறைசாற்றின பழகியமுகமென்று
புத்தி வேகமாய் நினைவடுக்குகளில்
தேடி வெறும்கையோடு திரும்பியது

சில அடிகள் முன்னேறிவிட்டு
தலைதிருப்பி புன்னகைத்துவிட்டு
பயணித்தோம் எதிரெதிர் திசைகளில்
ஒற்றை வார்த்தைகூட பரிமாறாமல்

எதிர்பாரா ஏதோ ஓர் நொடியில்
புத்தி அவளைப்பற்றிய விவரங்களை
பந்திவிரிக்க கூடும் புள்ளிவிவரங்களோடு.
அன்று சிலநிமிடங்கள் பயணிக்ககூடும் நான்
அவள் நினைவுகளோடு அவளில்லாமல்......

No comments:

Post a Comment