Wednesday, November 6, 2013

அரசாள்கிறேன்


 
தினமும் கொட்டும் அருவியில்
நீர்த்துவளைகளை கையேந்துகிறாய்
ஆச்சரியத்துடன் எனக்கானதாயென்று

புரியாது விழிக்கிறேன்...
புதிதாக பார்க்கிறேன்
புரிதல்களில் பிழையோ
புரியவைக்க தவறினேனோ

வார்த்தைகளை இழுத்துக்கட்டி
தூதுவிடுகிறேன் கடிதமாக
முழுவதும் படித்துவிட்டு
முறுவலிக்கிறாய் மெதுவாக

பட்டயமிட்ட வார்த்தைகளில்
இதழ்பதிக்கிறாய் அறிவேனென்று
இம்முறையும் தோல்விகண்டு
அரசாள்கிறேன் உன் இதயத்தை

No comments:

Post a Comment