Thursday, September 26, 2013

மகிழ்ச்சிபூக்கள்


மகிழ்ச்சியால் நிரப்பி
கொள்கிறேன்
இந்த நொடியை

பொங்கிவழிவதை...
அடுத்தடுத்த நொடிகளிலும்
நிரப்பிவைக்கிறேன்

அமுதசுரபியாக
வழிவதை
விதைத்துவைக்கிறேன்
செல்லும் பாதையாவிலும்

பூத்துக்குலுங்கும்
மகிழ்ச்சிபூக்களை
பறித்துவிடாதீர்கள்
மறந்தும் கூட......

1 comment: