Monday, September 16, 2013

சந்திப்பு



பிரிவிற்கு பின்
ஏதேனும் ஓர் நாள்
எதிர்பாராமல் சந்திக்ககூடும்
கனத்த இதயத்துடன்.
ஆவலாய் நலம் விசாரிப்பதோ,
அலட்சியோ பார்வையோ,
காணாதது போல் நகர்தலோ
ஏதோ ஒன்று நடக்கக்கூடும்

மனதின் எண்ணங்கள்
கண்கள் வழி ஒழுகாமல்
இரும்பு திரையிட்டு
மறைக்கும் முயற்சியில்
தோல்வியும் ஏற்படக்கூடும்.

எல்லா உணர்வுகளையும்
கட்டுக்குள் கொண்டுவந்து
வெற்றிகரமாய் சூழலை
சமாளிக்கவும் கூடும்.

என்ன நடந்தாலும்
இதயத்தின் மையத்தில்
கல்வெட்டாக பதிந்த
பசுமையான நினைவுகளை
புறந்தள்ளி ஓர் நொடியும்
வாழ்தல் கைவருவதில்லை

No comments:

Post a Comment