Sunday, September 1, 2013

ஊசலாட்டம்


ஓர் நிமிடம் நெருங்கியும்
மறுநிமிடம் விலகியும்
பரிதவிக்கும் மனதிற்கு
கேடயமாய் ஏதுமில்லை

புத்தியின் கூரியவாளால்
கசியும் குருதியை
புறந்தள்ளவுமியலாது
மெளன கூட்டுக்குள்
சமாதியாகிறது........

நிம்மதியாக கண்மூட
நர்த்தனமாடும் நினைவுகளில்
பாசக் கயிறு கொண்டு
பக்குவமாய் உன்னருகில்
அமர்த்திக் கொள்கிறாய்.

ஊசலாட்டத்தில் உழன்றதை
ஓரிடத்தில் நிறுத்திவைக்க
அசையாமல் நிற்கிறது
அடுத்த காற்றின் வருகைவரை

No comments:

Post a Comment