Sunday, September 1, 2013

வான் தொடும் கனவுகளோடு


 
எங்கேயோ இருந்து
மெதுவாய் வந்தமர்ந்த
வண்ணத்துப்பூச்சி
வண்ணங்களை கரைத்து
என்னுள் இறக்கி அழகிய...
ஓவியமாக்கியது என்னை

நதிநீரில் தெரிந்த பிம்பத்தை
ஆச்சரியமாய் காண்கையில்
துள்ளிக்குதித்த சிறுமீனும்
சிரித்துச் சென்றது நட்பாக.

வண்ணத்துள் தொலைத்தயென்னை
மீட்டுடெடுக்க மழைநீரில் சரணடைந்தேன்.

மழைநீரோ இதுவே அழகென
வண்ணத்தை அடர்த்தியாக்கி
வாழ்த்தியே விடைபெற்றது.

முகமூடியே நிசமுகமென மாற
தோகை விரித்த மயிலாக
ஆடித்திரிகிறேன் மரங்களடர்ந்த
வனாந்தரத்தில் தனியாக
வான் தொடும் கனவுகளோடு

No comments:

Post a Comment