Monday, September 16, 2013

67வது சுதந்திர தினம்



67வது சுதந்திர தினம். பெருமையாக உணர்ந்தாலும் மனதில் சிறு வருத்தமும் எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது. எல்லா வளங்கள் இருந்தும் நம்மால் ஏன் வளர்ந்த நாடுகள் பட்டியலில் வர இயல வில்லை.

தாத்தா தலைமுறையில் இருந்த நாட்டுப்பற்று அப்பாவின் தலைமுறையில் சிறிது குறைந்தே காணப்பட்டது. எனது தலைமுறையில் நாட்டுப்பற்றை விட தனிமனித சுகம் பெரிதாக தோன்ற ஆரம்பித்து விட்டது. எனது பிள்ளைக்கு இந்தியா ஏதோ உறவுகள் வசிக்கும் ஒரு நாடு என்ற உணர்வு மட்டுமே.

சுதந்திரம் பெற பாடுபட்ட கதையை மதிப்பெண்களுக்காக மனனம் செய்யும் போது சிறிதும் உணரமுடியவில்லை அவர்களின் தியாகங்களை. வரலாற்றை சரியாக மனதில் பதிவு செய்ய முடியாதது நமது பிழையே. வெறும் பேச்சுக்களோடு நமது வீரத்தை முடித்துக்கொள்கிறோம். ஒற்றுமை உணர்ச்சி ஆடிக்கும் அமாவாசைக்கும் மட்டும் லேசாக தலைதூக்கிப்பார்க்கிறது. சிந்திக்கும் இளைஞர்களை அரசியலில் தடம் பதிக்க எது தடுக்கிறது என்றே தெரியவில்லை. நம்முள் எத்தனையோ குறைகள் இருந்தாலும் இதைக் களைய சிறிதும் முயலுவதில்லை நாம். மனதில் எழும் ஆயிரம் கேள்விகளுக்கு கேள்விகள் மட்டும் பதிலாகிறது.

இனிவரும் வருடமாவது என்னால் முடிந்ததை இந்த சமுதாயத்திற்கு செய்வேன் என்ற உறுதியோடு இந்த தினத்திற்கு விடைகொடுக்கிறேன்.

ஜெய் ஹிந்த்


No comments:

Post a Comment