Friday, August 30, 2013

காத்திருக்கிறேன் காதலுடன்


நொடிக்கொருதரம் மாறும்
உன் இயல்புகளால்
சிந்தை குழம்பித்தான்
தவிக்கிறேன்...........

ஒருநொடி அணைத்து
மூச்சுதிணறடிக்கிறாய்
மறுநொடி புறக்கணித்து
மரிக்கவைக்கிறாய்.

தொட இயலா வானத்து
விண்மீன் எனநினைக்கையில்
கைகளுக்குள் சிறைபுகுகிறாய்
அழகாக......
தொட்டுவிடும் தூரமென
கைநீட்டுகையில்
வானவில்லாய்
மாயமாகிறாய்...............

குழம்பித் தவித்து
ஒதுங்க நினைக்கையில்
தாய்கேங்கும் மழலையாய்
வழிமறிக்கிறாய் கண்ணீர் துளிர்க்க..........

வாரி அணைத்துக்கொள்ள துடித்தாலும்
புத்தியின் அபாயச் சங்கிலியால்
கைகள் கட்டி காட்சியாளனாகிறேன்

எனதுள்ளம் உணர்ந்து, முகமூடிகளைத் துறந்து
உனக்கான இயல்போடு வரும் நாளுக்காக
ஒவ்வொரு நொடியும் காத்திருக்கிறேன்,
காதலை அடைகாத்தும் வைக்கிறேன்.

1 comment: