Friday, August 30, 2013

நெஞ்சம் கலங்கடிக்கும் நின் அவதாரங்கள்


வாழ்க்கையில் யாதுமாகிறாய் ஒரு நிமிடம்
கனவெனெ காணாமல் போகிறாய் மறு நிமிடம்
மிட்டாயை தொலைத்த சிறுபிள்ளையாக
சித்தம் கலங்கியே போகிறேன் சில நிமிடம்

கோபத்தின் உச்சியில் கலங்கடிக்கிறாய் ஒரு நிமிடம்
முத்தத்தின் ஈரத்தில் மயக்குகிறாய் மறுநிமிடம்
உணர்ச்சி வெள்ளத்தில் தேன் உண்ட வண்டாய்
மயங்கியே தோள் சாய்ந்தேன் சிலநிமிடம்

ஆசானாய் அவதரிக்கிறாய் ஒரு நிமிடம்
பிள்ளையாய் மாறிப் போகிறாய் மறு நிமிடம்
கையாள தெரியாமல் தவிக்கிறேன் சில நிமிடம்

வற்றிய கிணறாக ஓர் நிமிடம்
கொட்டும் அருவியாக மறுநிமிடம்
செய்வதரியாது திகைப்பில் சில நிமிடம்.

சண்டைக் கோழியாக ஒரு நிமிடம்
அமைதி புறாவாக மறுநிமிடம்
குழப்பத்தின் உச்சத்தில் நீந்துகிறேன் சில நிமிடம்

நிமிடங்களையெல்லாம் சிறையெடுத்து
அன்பின் ஆழத்தில் ஆழ்த்தி
திணரடிக்கிறாய் காலமெல்லாம்.

உன் கைகளுக்குள் பொத்திக்கொள்ளுவதால்
சூழாவளிகளையும் சூட்சமமாக வென்று
புதைந்து கொள்கிறேன் உன்னுள்

No comments:

Post a Comment