Sunday, March 24, 2013

உன் வரவை எதிர்நோக்கி


காத்திருக்கும் காலமெல்லாம்
வீண்னென்று உணர்ந்தாலும்,
கருகாத நம்பிக்கை மொட்டு
சாட்சியாகிறது அன்பிற்கு......

மெளனக்கதவின் அருகில்
எதிரும்புதிருமாய் வீற்றிருக்க,
தாள் திறக்கும் ஒற்றைச் சொல்லை
தேடிக் களைக்கிறது மனம்......

செவிக்குள் நுழையும்
ஆயிரம் வார்த்தைகளில்
எனக்கானவை யில்லாததால்
தாமரையிலைத் தண்ணீராக
மனதில் ஒட்டாமல் ஓடுகின்றன
கோப அலைகளை எழுப்பிவிட்டு.......

இன்னதென்னறியா உணர்ச்சிகளால்
சிறைப்பட்டு மெளனமாய்
கட்டுண்டு கிடக்கிறது மனம்,
விடுவிப்பாயென்ற நம்பிக்கையில்
உன் வரவை எதிர்நோக்கி.......

2 comments: