சிதைந்த கனவுகளுக்கு
சமாதிகட்டிய பிறகு
சமாதானமாகாத மனம்
சிந்துகிறது ஒற்றைத் துளி கண்ணீரை
மூடிய இமைகளுக்குள் உலாவிய
ஒற்றைக் கண்ணீர் மடை திறந்ததும்
இமைமுடிகள் நனைத்து தடையற்று
கன்னம் கடந்து காணாமல் போகிறது.
இமைமுடியின் ஈரப்பசை
மெளனமாய் பறைசாற்றுகிறது
உன்மீதான என் அன்பினை.
அன்பின் அருமை வரிகள் அருமை...
ReplyDelete