Thursday, November 22, 2012

விடியல்


விடியலின் வருகையை இனியகுரலில்
பறைசாட்டுகிறது முகம்தெரியா
ஒரு பறவையின் குரல்.

அலைபேசியின் அலாரத்தில் கண்விழித்த
எரிச்சலை அழகாக விலக்கி
மகிழ்ச்சியை இட்டு நிரப்புகிறது.

இடைவெளி விட்டு ஒலிக்கும் குரலின்
கிறக்கத்தில் மெதுவாக அவிழ்கிறது
மனமொட்டு மணம்பரப்பிய படி.....

பதிலுக்கு குரலெழுப்பி நன்றிசொல்ல
துடிக்கும் இதயத்தை நகரும்
கடிகார முட்கள் கட்டிப் போடுகிறது.

1 comment: