புலரும் பொழுதினில் மலரும்
மொட்டுக்களின் இதழ்வழி கசியும்
ஏகாந்தத்தை விழிவழி பருகி
பசியாருகிறேன் பரவசமாய்.
மொட்டுக்களின் இதழ்வழி கசியும்
ஏகாந்தத்தை விழிவழி பருகி
பசியாருகிறேன் பரவசமாய்.
பரவசம் பரவி உதிரத்தில்
கலந்து புத்தியில் நிறைந்து
இதழ்களில் படிகிறது புன்னகையாக
காலைப் பொழுதின் ஒவ்வொரு
அசைவையும் உற்று நோக்க ஆயிரம்
கற்பனைகள் உயிர்த் தெழுகின்றன.
விநாடிக்கு விநாடி புதுமுகம் காட்டி
மாயாஜாலம் செய்யும் இயற்கையை
இரசித்தபடி காட்சிகளை விழிகளில்
சிறைப்பிடிக்கிறேன் இரசிகையாக......
கலந்து புத்தியில் நிறைந்து
இதழ்களில் படிகிறது புன்னகையாக
காலைப் பொழுதின் ஒவ்வொரு
அசைவையும் உற்று நோக்க ஆயிரம்
கற்பனைகள் உயிர்த் தெழுகின்றன.
விநாடிக்கு விநாடி புதுமுகம் காட்டி
மாயாஜாலம் செய்யும் இயற்கையை
இரசித்தபடி காட்சிகளை விழிகளில்
சிறைப்பிடிக்கிறேன் இரசிகையாக......
No comments:
Post a Comment