Wednesday, September 26, 2012

துளி விஷம்

 
 
 
 
கடலினை யென்ன செய்யுமென
ஒருதுளி நஞ்சினை கலந்தனர்.
கடலே விஷமாக உருமாற
உருகி தவிக்கின்றனர் இன்று.
பிறர்மீது பழிகூறி பிதற்றினரே
பிழையே தனதென்பதை மறந்து.
தனது பிழைகளை களைந்தபின்னே
பிறர்பிழை காண்பது நன்று.

No comments:

Post a Comment