Tuesday, September 18, 2012

மனம்



மனம் பேசத் துடித்தாலும்
இதழ்க் கதவைத் திறக்க
முடியாமல் தவிக்கும் வார்த்தைகள்
வெளிவருகின்றன கண்கள் வழி
ஒற்றை கண்ணீர் துளியாய்

கண்ணீர் துளியை விரல் நுனி
ஏந்தி மொழிபெயர்க்கையில்
சமாதி கட்டுகிறது மனஸ்தாபத்தை
அன்பை அருவியாக கொட்டி

அருவியில் மூழ்கியெழுந்தபின்
அத்துணையும் அழகாக புலப்பட
அளவிளா இன்பத்தை அனுபவித்து
அமைதியாக அடங்குகிறது மனம்.
 

No comments:

Post a Comment