Saturday, September 15, 2012

காணவில்லை என் கவிதைகளை

 
 
காணவில்லை என் கவிதைகளை
உயிரற்ற வெறும் வார்த்தைகள் மட்டுமே
உலா வருகின்றன உன் பார்வைக்காக.
நீரின்றி காயும் பூமியாக வாடும் இதயத்துள்
தேடுகையில் தொலைந்தே போகிறேன் நானும்.

உன் நினைவுகளெனும் கயிற்றை பற்றியபடி
ஒவ்வொரு அடியாய் நகர்கிறேன் உனை நோக்கி.
நெருங்கிவிட்டதாய் நினைக்கையில் மேகத்துள்
மறைந்த தூரத்து நிலவாய் சிரிக்கிறாய்.......

கடக்க வேண்டிய தூரங்கள் கண்களுக்கு
எட்டா தொலைவாக இருக்க சோர்ந்து,
பிடியை விடுகிறேன் என்னையறியாமல்
நிற்கிறேன் தொடங்கிய இடத்திலேயே.
 
மீட்பாய் எனற மனக்கோட்டை மெதுவாய்
சிதைந்து துகள்களாய் காற்றினில் கரைய ,
கடைசி சுவாசத்தில் என் வாசத்தை நிரப்பி
உன்னிடம் அனுப்புகிறேன் என் நேசத்தை சொல்ல.
 

No comments:

Post a Comment