Saturday, September 1, 2012

கடலில் கலக்கும் துளிபோல



உன் ஒற்றை விளிப்பில் பனிபோல் மனமுருக
கடல் தேடி ஓடும் நதியாய் வந்தடைகிறேன்.
 

அலைகளை அறிமுகப்படுத்துகிறாய்.
துள்ளும் மீன்களை நட்பாக்குகிறாய்.
திமிங்களங்களிடம் திராணியின்றி தவிக்கையில்
திடமாய் எதிர்க்க கற்றுக் கொடுக்கிறாய்.
 

நண்டுகளின் நர்த்தனங்களை நிம்மதியாய்
இரசிக்க வைக்கிறாய் அருகிருந்து.
சங்குகளின் நாதத்தில் மெய்மறக்கவைக்கிறாய்.
மூச்சு முட்ட முத்துக்களை அள்ளச்செய்கிறாய்.
 

ஒவ்வொரு செல்களையும் பூக்கவைக்கிறாய்
பேரின்ப அமைதியில் ஆழ்த்துகிறாய்.
கடலில் கலக்கும் துளிபோல
காணாமல் போகிறேன் உன்னுள்.


No comments:

Post a Comment