Tuesday, August 7, 2012

கண் கெட்ட பின்


முற்றுப் பெறாத கவிதையாய் முற்றத்தில்
கேட்பாரற்று கிடக்கிறேன் ஒரு மூலையில்,
உன் நினைவுகளில் மூழ்கிய படி ...

குருடன் உணர்ந்த யானை போல்
முழுதாய் உனையறியாமல்
கற்பனைகளால் வாழ்க்கையை இழந்துவிட்டு
கனவுகளில் வாழ்கிறேன் உன்னோடு.

உன் அன்பால் திளைத்த நாட்களெல்லாம்
கண்முன் காட்சிகளாய் வலம் வர,
மருகுகிறேன் மனதிற்குள்.....

அன்று நீ வண்ணங்களால் என் வாசல்
நிரப்பிய போது, நீரூற்றி கலைத்து விட்டு,
இன்று ஒற்றைப் பனைமரமாய் தவமிருக்கிறேன்
தோப்பாகும் கனவுகளோடு உன் வரவுக்காக.

No comments:

Post a Comment