Tuesday, August 7, 2012

எப்படிப் புரியவைப்பேன்


நீ உதிர்த்த வார்த்தைகளை
மனப்பெட்டகத்தில் பூட்டிவைத்து
காவலுக்காய் உன் நினைவுகளை
நிறுத்துகிறேன்........
நினைவுகளில் கசியும்
உணர்வுகளை வடிவமாக்கி
உன் பார்வைக்கு அனுப்புகிறேன்

ஆசானின் கண்டிப்போடு
குறைகளைப் பட்டியலிட்டு
முத்திரையாய் ஜீவனில்லை
எழுத்துக்களில் என்றுரைத்தாய்.

நீயில்லாப் பொழுதுகளில்
எனைப் போலவே எழுத்துக்களும்
ஜீவனிழந்தே உலவுகின்றன என்பதனை
எப்படிப் புரியவைப்பேன் உனக்கு

No comments:

Post a Comment