சிறு சலசலப்பிற்கும்
சஞ்சலப்பட்டு ஓடி வருகிறேன்
உன்னிடமே, சமாதானங்களுக்காய்....
ஒவ்வொருமுறையும்
தாயின் பொறுமையோடு
செவிசாய்த்து,விளக்கமளித்து
தெளிந்த நீரோடையாக்குகிறாய்.
சபதம் ஏற்கிறேன்
இதுவே கடைசிமுறையென்று.
பிரசவ கால வைராக்கியமாய்
உடைக்கப்படுகிறது அடுத்த சலசலப்பில்.
உன் பொறுமைகள் உடைபடுவதையும்,
மெளன அணைப் போட்டு தடுத்து
நீ தவிப்பதையும் உணரமுடிகிறது.
சிறிது கால அவகாசம் கேட்கிறேன்
என்னை திடப்படுத்திக் கொள்ள,
அதுவரை பொறுமை விடாதிருக்க
யாசிக்கிறேன் உன்னை.........
நல்லா இருக்குங்க அக்கா
ReplyDelete