Tuesday, August 7, 2012

தாரைவார்க்கிறேன் உன்னிடமே



உன் வாய்மொழிச் சொற்களெல்லாம்
சத்திய ஆடை பூண்டிருக்குமென
நம்பிக்கை கடலில் நான் நீந்திக்கொண்டிருக்க
பொய்களெனும் பேரலைகளால்
புரட்டிப் போடுகிறாய் கரையினிலே........
அகதியாய் கரையினில் காத்திருக்கிறேன்
உன் தரப்பு நியாயங்களுக்காய்.......
வாய்மூடி மெளனியாய் நீயிருக்க
கோபக் குழம்பில் மூழ்குகிறேன்.

அடைகாக்கிறேன் அத்துணை கோபங்களையும்
கோபக்கணைகளாய் உன் மீது வீச,
அன்பாய் வெளிவந்து அதிசயத்தில்
ஆள்த்துகிறது என்னை.

வாய் திறந்து, மெய் மொழிந்து
அன்புச் சிறைக்குள் அடைபடுவாயா?
ஊமையாய், உண்மை மறைத்து
நம்பகத்தன்மையிழந்து பழி ஏற்பாயா?
தீர்ப்புகளையும் தாரைவார்க்கிறேன் உன்னிடமே........

No comments:

Post a Comment