Sunday, August 26, 2012

வீறு கொண்டு எழுவோம்


தன்னம்பிக்கையிழந்து, தைரியமிழந்து
கண்ணீர் விட்டு,காலடியில்
வீழ்வோம் எனக் கனவு கண்டாயோ?

வேர்களை வெட்டி விட்டு
நீ அர்ப்பரிக்கும் நிமிடத்தில்
ஆயிரம் விதைகளை விதைத்ததை
அறியாயோ.......

உன் இராஜதந்திரத்தால் இன்று
வீழ்ந்தது போல் தோன்றினாலும்
வெட்ட வெட்ட துளிர்க்கும்
அதிசய சீவன்கள் நாங்களென்பதை
அறியாத மூடன் உனை வீழ்த்த
வீறு கொண்டு எழுவோம்...........

No comments:

Post a Comment