அதிகாலை ஆதவனின்
மென்கதிர்கள் மென்மையாய்
வையகத்தை வாஞ்சையுடன்
கட்டியணைக்க, அக்காதலுக்கு
காற்றும் மெல்லிசையமைக்க,....
மென்கதிர்கள் மென்மையாய்
வையகத்தை வாஞ்சையுடன்
கட்டியணைக்க, அக்காதலுக்கு
காற்றும் மெல்லிசையமைக்க,....
இவற்றையெல்லாம் இரசித்தவண்ணம்
ஓவியமாய் நீ நின்றிருக்க,உனை
அணுஅணுவாய் இரசிக்கறேன்..........
மெதுவாய் கரம் பற்றி
காதல் கவி நீ சமைக்க
அறுசுவையுண்ட அரைமயக்கத்தில்
தோள் சாய்கிறேன் கொடி போல்.
உன் கவிபடிப்பது ஒரு சுகமெனில்
உன் குரல்வழி அதைச் சுவைப்பது
அடிக்கரும்பின் தித்திப்பை செவிவழி
இதயத்தில் நிரப்புவது போல் நிறைவாயிருக்கிறது.
ஓவியமாய் நீ நின்றிருக்க,உனை
அணுஅணுவாய் இரசிக்கறேன்..........
மெதுவாய் கரம் பற்றி
காதல் கவி நீ சமைக்க
அறுசுவையுண்ட அரைமயக்கத்தில்
தோள் சாய்கிறேன் கொடி போல்.
உன் கவிபடிப்பது ஒரு சுகமெனில்
உன் குரல்வழி அதைச் சுவைப்பது
அடிக்கரும்பின் தித்திப்பை செவிவழி
இதயத்தில் நிரப்புவது போல் நிறைவாயிருக்கிறது.
மணித்துளிகள் நொடிகளாய் மாற
மாலைப் பொழுதும் மலர
மனதிற்கினியவன் மாயமாய் மறைய
மதம் கொண்ட யானைப் போல்
உனைத் தேடும் மனதிற்கு,
நினைவுகளெனும் மயக்க ஊசி பாய்ச்சி
மட்டுப்படுத்துகிறேன் வேகத்தை.
மாலைப் பொழுதும் மலர
மனதிற்கினியவன் மாயமாய் மறைய
மதம் கொண்ட யானைப் போல்
உனைத் தேடும் மனதிற்கு,
நினைவுகளெனும் மயக்க ஊசி பாய்ச்சி
மட்டுப்படுத்துகிறேன் வேகத்தை.
No comments:
Post a Comment