Thursday, August 30, 2012

சூறாவளிப் பேரன்பில்





உன் சூறாவளிப் பேரன்பில் திசை தெரியாமல்
சுழன்றடிக்கப்படுகிறேன் சிறு இலை போல்.
ஒரு நிமிடம் சந்தோஷமெனும் கோபுரத்தில் ஏற்றுகிறாய்
மறுநிமிடம் துன்பமெனும் குப்பைத்தொட்டியில் எறிகிறாய்.
மாறி மாறி நீ ஆடும் கண்ணாபூச்சி ஆட்டத்தில்
கருணையே இல்லாமல் பந்தாடப்படுகிறேன்.......... 
 
விரும்பியே வந்தடைந்ததால் விலகாமல்
பயணிக்கிறேன் உன்னுடன், உன் ஆசைப்படி.
உன் அரவணைப்பின் நிழலுக்குள்ளே
வார்த்தை அம்புகளால் இதயத்தை கீறிவிட்டு
உதடுகளுக்கு ஒத்தடம் கொடுக்கிறாய்.
 
சிலசமயம் வெறுமையில் மனம் உறைய
தனிமை தேடி சிறைப்படுகிறேன்.
உன் அன்பின் அடர்த்தியில் இரத்தம்
சொட்ட சொட்ட காயப்படுகிறேன். 
 
விரும்பியே சிலுவை சுமக்கிறேன்
என்றேனும் சூறாவளி ஓய்ந்து
தென்றல் வீசுமென்ற நம்பிக்கையில்.

1 comment:

  1. தென்றல் வீச வாழ்த்துக்கள்...:):) வீசும் தென்றலின் குளிர்ச்சியை அனைவருக்கும் அன்பாய் வழங்குவாய் தோழி.

    ReplyDelete