Tuesday, August 7, 2012

நிழல் போல் நீயுடனிருப்பதால்


காதுமடலில் நீ கிசுகிசுத்த
காதல் மொழிகளெல்லாம்
காவியமாய் உறைந்து,
மனதினுள் கவிபாட
மயங்குகிறேன் உன்னிடத்தில்....

நீ அணைத்துக் கூறும் சமாதானத்திற்காகவே
செல்லச் சண்டையிடுகிறேன் நாள்தோறும்,
முடிவுகள் தெரிந்ததாலேயே ஆவலாய்
எதிர்நோக்குகிறோம் நாம்மிருவருமே......

குழந்தை போல் அடம்பிடிக்கும் நேரங்களில்
தாயைப் போல் பொறுமை காக்கிறாய்.......
தவறுணர்ந்து குன்றிப் போகும் நேரங்களில்
அரவணைத்து ஆறுதல் சொல்கிறாய்......

நிழல் போல் நீயுடனிருப்பதால்
நிம்மதியாய், நிறைவுடன்
நகர்கிறது காலச் சக்கரம்.

No comments:

Post a Comment