இடியென சோகம் வாழ்க்கையை தாக்கினாலும்
புன்னகையால் சேதமில்லாமல்
கடப்பவள்.
இன்பத்தில் முழுவதுமாய் மூழ்கித் திளைப்பவள்
துன்பத்தையும் அழகாய் கடக்கத் தெரிந்தவள்
எல்லா விஷயங்களையும் அறிந்த அறிவாளி அல்ல
தேவையானதை தெரிந்து கொள்ளும் புத்திசாலி
கடவுள் இருக்கிறாரா எனத் தர்க்கம் செய்யாமல்
சக்தி ஒன்று உண்டு என சமாதானம் ஆனவள்
புத்தியால் எல்லாவற்றையும் ஆராயாமல்
மனதால் வாழ்பவள் வாழ்க்கையை.
எல்லோருக்கும் அனுசரித்தே வாழ்பவள்
அதிலும் தன்சுதந்திரம் போற்றுபவள்.
உலகத்தைப் புரட்டிப் போடும் புரட்சிக்காரியல்ல
தன் சுற்றத்திற்கு எடுத்துக்காட்டாய் வாழும் சாதாரண மனுஷி
No comments:
Post a Comment