Friday, August 10, 2012

உறுத்தல்கள் துறந்து


எங்கே தொலைத்தேன் இயல்புகளை
சுற்றி, சுற்றித் தேடுகிறேன்,
தொலைத்த இடம் தெரியவில்லை

வாழ்க்கைச் சக்கரத்தில் சிக்கி
உயிர் துறந்தனவா? இல்லை
குற்றுயிரும் குலையுயிருமாய்
எங்கேயாவது எனக்காக
காத்திருக்கின்றனவா?

தொலைத்தது புரியவே பலகாலமானது
மீட்டெடுக்கும் காலம் எப்போது?
கண்ணாடியில் காட்சியளிக்கிறது
என் முகமே எனக்கே அந்நியமாய்..........

இழந்த இயல்புகள், மறந்த இயல்புகளாயிடுமோ?
மீட்பதும் சாத்தியமா? என ஆயிரம் கேள்விகள்
அலையலையாய் எழும்பி மூச்சைத் திணரடிக்க
அமைதியாய் அமர்கிறேன் அகல் விளக்கின் முன்...

எரியும் திரியும், குறையும் எண்ணையும்
எதையோ புத்திக்கு உணர்த்த தெளிகிறேன்,
அழைக்கும் மகனின் குரல் சிந்தையை நிரப்ப
கலக்கிறேன் வாழ்க்கைக் கடலில்
உறுத்தல்கள் துறந்து.......................

No comments:

Post a Comment