Sunday, August 26, 2012

தெரிந்தே தொலைகிறேன்


 
உன் தேடல்கள் தெரிந்தே தொலைகிறேன்
தூரமாய் நின்று இரசிக்கிறேன் உன் தவிப்புகளை
தவிப்புகளில் தெறிக்கும் அன்புச் சாரலில்
சொட்டச் சொட்ட நனைகிறேன். 
கண்களும் மனமும் சோர்ந்து
துவளுகையில் ஓடி வந்து
தாங்கிக் கைப்பிடிக்கிறேன்.

சிறு அழுத்தலில் என் அன்பினை
கரத்தின் வழி இதயம் நிரப்புகிறேன்.
நாடகமறிந்து கோபம் கொள்கையில்
அன்பெனும் புயல் காற்றால்
வேரோடு சாய்க்கிறேன் உன் கோபத்தை

No comments:

Post a Comment