Thursday, August 30, 2012

எதிர்பார்த்து காத்துக்கிடக்கிறது



சோகமும்,சுகமும் கலந்த கலவையாய் மனம்
 ஏனோ தானோ என்றே நகர்கிறது மணித்துளிகள்
 மகிழ்ச்சிப்பூக்கள் மலராமல் மொட்டாகவே கருகிறது
 என்னவென்றே தெரியாத இருள் மெதுவாய் சூழ்கிறது
 எதையையோ சாதிக்க துடிக்கிறது புத்தி
 தோல்வியுண்ட வீரனாய் மனம் துவள்கிறது
கண்டறியும் சக்தியில்லாமல் கட்டுண்டு கிடக்கிறது. 

தனிமையைத் தேடியே ஓடும் மனதை,
சிறைப்பிடித்து கேள்விகளால் கதறடித்து
பேரிண்பம் காணும் புத்தியிடம் சிக்கி
கழுகிடம் சிக்கிய கோழிக்குஞ்சாய்
நடுங்கிறது மனம் நிர்கதியாய்..........
 

புரியாத புதிராய் வாழ்க்கை சிரிக்க
துடுப்பை இழந்து ஓட்டைப்படகில்
தன்னம்பிக்கையோடு எதையோ
எதிர்பார்த்து மனம் காத்துக்கிடக்கிறது.......

 


No comments:

Post a Comment