Thursday, August 2, 2012

வண்ணங்கள் தொலைத்த வானவில்லாய்



நமக்கான பூஞ்சோலையில்
காலடி பதிக்கிறேன் கனவுகளுடன்.....
நீ வந்து விட்டு போனதிற்கான
காலடிச்சுவடுகள் வரவேற்கின்றன.

உன் சுவடுகள் பதித்த
இடங்களில் எல்லாம்
நீ விட்டுப்போன மலர்களை
மாலையாய்த் தொடுத்து
காத்திருக்கிறேன் உன் வரவுக்காய்

சுனாமியாய் சில செய்திகள்
காதில் இடியாய் விழ
சுருண்டு போகிறது மனம்
தொட்டாச்சிணுங்கியாய்

தன்னிச்சையாய் கைகள்
மாலையைத் தவறவிட
தவிக்கிறேன் வண்ணங்கள்
தொலைத்த வானவில்லாய்......

No comments:

Post a Comment