Friday, August 10, 2012

உயிர்ப்போடு நானிருப்பேன்


என்றோ நீ உதிர்த்த வார்த்தைகள்
சிதையாமல் சிந்தையில் சிந்துபாட
சிக்குண்டு கிடக்கிறேன் அதனுள்ளே....

சிந்தையில் ஒர் ஓரமாய் உனைப்பற்றிய
சிந்தனைகள் சிறகடித்துப் பறந்து கொண்டே
இருக்கின்றன சலிப்பேயில்லாமல்.....

உருவாக்கிய எதிர்காலத் திட்டமெல்லாம்
துருப்பிடித்து தூங்குகிறது ஒரு மூலையில்,
செயல்வடிவம் கனவானதால்.......

எங்கேயிருக்கிறாய் ?
எப்படி இருக்கிறாய் ?
ஆயிரம் கேள்விகள் பதில் தெரியாமலேயே
தொக்கி நிற்கின்றன மனதினுள்
நலமாய் இருப்பாய் என்ற நம்பிக்கையோடு...........

எதிரெதிர் திசையில் பயணித்தாலும்,
சந்திப்புகளைப் புறக்கணித்தாலும்,
உன் கடைசி சுவாசம் வரை
உன்னுள் உயிர்ப்போடு நானிருப்பேன்
என்பது திண்ணம்................................


No comments:

Post a Comment