ஏதோ ஒன்று புத்தியைக் குடைந்து
மனதில் பாரமாய் கிடக்கிறது
அந்த ஒன்றை ஆராய போக
அனுமார் வாலாய் நீண்டு
எங்கோ அழைத்துச் செல்கிறது
செல்லும் பாதையெங்கும் உணர்ச்சிகளெனும்
அக்னிக் குழம்புகளில் மூழ்கி
கரைசேர முடியாமல் தத்தளிக்கிறேன்
எதையோ பற்றி
எப்படியோ நீந்தி
கரைசேருகையில் தான்
தெரிகிறது, தொடங்கிய
இடத்திலேயே நிற்பது.
No comments:
Post a Comment