Tuesday, July 17, 2012

அறியாயோ



உடைந்த உன் குரலால்
உயிர் நடுங்க வைத்தவனே......
தோள் கொடுக்க வேண்டிய நேரத்தில்
தொலைதூரத்தில் நானிருந்து
உனக்காய் துடிப்பதை அறியாயோ........

மெதுவாய் உன் தலைகோதி
ஆறுதலாய் உனை தோள்சாய்த்து
உன் சோகங்களை என்னுள் வாங்கி
உனக்கான சுமைதாங்கியாய்
உனக்காய் நானிருப்பேன்........

வெளியில் வா என் அன்பே
துக்கங்களை முழுங்கிவிட்டு
சாதிக்க சீக்கிரம் வா............
உனக்காய் வழி மீது விழி வைத்து
காத்திருக்கிறேன்........

No comments:

Post a Comment