Thursday, July 26, 2012

நீ வருவாயென



வாழ்க்கைச் சக்கரத்தின்
ஓட்டத்தில் எங்கேயோ
தொலைந்து போகிறேன்.
மீட்டெடுக்கிறாய் சேதமில்லாமல்..


நானே மறந்த கனவுகளுக்கும்,
சிதைந்த என் கனவுகளுக்கும்
உயிர் கொடுக்கிறாய் கடவுளாய்.....


கனவுச் சிறகுகள் உயிர்த்தெழ
பறக்கிறேன் விண்வெளியில்
எதையோ தேடி, எதையோ சாதிக்க....
நொடிப் பொழுதும் அயராமல்
விரைவாய் தொடர்கிறது பயணம்.


முடிவில்லாப் பயணத்தில்
கால் வைக்கிறேன்
மரண வாசலில்......................


கடந்து வந்த பாதையின்
அர்த்தங்கள் அறிந்தவுடன்
ஆர்ப்பாட்டங்கள் அடங்கி
அமைதியாகிறேன்........


மரண வாசலிலும் மனம்
உனையே தியானிக்க
வாழாத வாழ்க்கையை வாழ
எனை மீட்டெடுக்க நீ மீண்டும்
வருவாய் எனும் நம்பிக்கையோடு
புதைகிறேன் வாழ்க்கைச் சக்கரத்தில்.



No comments:

Post a Comment