Thursday, July 26, 2012

ஒற்றை ராகம்


 
தூரத்தில் இருந்து ஓர் ஒற்றை ராகம்
மெதுவாய் மனம் வருடிச் செல்கிறது.
தனிமையின் சுகத்தை மீட்டி
அழகாய் இசைக்கிறது...........

சுதந்திரக் காற்றை சுவாசிக்க
பயந்து ஒடுங்கிய மனம்,
மெதுவாய் தைரியம் கொண்டு
புயல் காற்றிலும் அழகாய்
பயணிக்கிறது.......

இலட்சிய மூட்டைகள் அவிழ்க்கப்பட்டு
அதற்கான பாதைகளில் விதைக்கப்படுகின்றன.
விதைகளின் வீரியத்தை பூத்துக் குலுங்கும்
மரங்கள் எதிர்காலத்தில் பறைசாற்றும்...........

No comments:

Post a Comment