Thursday, July 26, 2012

மகனே உன்னால்


கருவினில் உன் அசைவினில்
வாழ்வதின் அர்த்தங்கள் புரியவைத்தாய்.

உன் சிரிப்பினில்,உன் மொழியினில்
உயிர்ப்பூ பூக்கவைத்தாய்.

உன் ஸ்பரிசத்தில்,உன் பிதற்றலில்
சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கவைத்தாய்.

“அம்மா” என்ற ஒற்றை அழைப்பினில்
உயிர்ப்போடு வாழவைத்தாய்.

துன்பத்தில் நான் தொலைந்திடும் வேளையிலே
அழகாய் எனை மீட்டெடுத்தாய்.

துகள்களாய் நொறுங்கிடும் தருணங்களில்
கோட்டைகள் எழுப்பித்தந்தாய்.

எல்லா நொடியிலும் உன் அன்பினால்
மனதை மலரவைக்கிறாய்.

No comments:

Post a Comment