தவங்கள் நீயிருந்து தருகிறாய் வரங்களை எனக்கு.
எனக்கான மலர்ப் பாதையமைக்க முட்களை
முத்தமிடுகிறது நின் பாதங்கள்...............
எனக்காய் நீ உழைக்க, அயல்நாடு செல்ல,
தனிமையில் சிக்குண்டு, நினைவுகளால் வதங்கிய
பேதை மனம், பொங்கும் அன்பைக் கூட
கோபக் கணைகளாகவே உன்னிடம் அனுப்புகிறது.
எதிர்ப்பில்லாமல் கணைகளைத் தாங்கி
மெளனமாய் அன்பினில் நீ நனைக்க
உடைந்து நொருங்குகிறேன்
தனிமையை துணைக்கமர்த்தி பயணந்தனை
துவங்குகையில், பாதங்கள் வருடும் மலர்களில்
உணர்கிறேன், உன் வியர்வையின் வாசத்தை.......
கண்ணீரோடு துழாவுகையில் எங்கோ தூரத்தில்
எனக்காக உழைத்தபடி நீ தெரிகிறாய் மங்கலாய்.......
No comments:
Post a Comment