Thursday, July 26, 2012

மீட்க வருவாயா


உன்னுடனான வாழ்க்கை
தளிர் கனவாய் கலைந்திடுமா?
வைகறைக் கனவாய் உயிர்பெறுமா?

மண்கோட்டைதனை எழுப்பி
அலை வந்து கரைக்கையிலே
செய்வதறியாது விழித்திருக்க
இறுகணைத்து மாடமாளிகை
எழுப்பித்தந்தாய் எனக்காக....


மாளிகைதனிலே இறுமாந்து நானிருக்க
தனியே தவிக்கவிட்டு சென்றதேனோ?
கண்ணீரும் வற்றிப்போக,
வெறுமைதனை துணைகொண்டு
ஒற்றைப் பனைமரமாய்
காத்திருந்தேன் உனக்காக........

விடிவெள்ளியாய் வாழ்க்கைதனில்
மீண்டும் நீ நுழைந்தாய்.
அன்பை வார்த்து உயிர்பூ பூக்கவைத்தாய்.
பூக்களைத் தான் நான் கோர்த்து
மாலையோடு காத்திருக்க
மாயமாய் மறைந்ததென்ன......

உன் நினைவுகளே சிந்தனையில் நிறைந்திருக்க,
காணும் உருவமெல்லாம் நீயாய் காட்சிதர,
உன் பிரிவு என் பாதி உயிர் தின்ன
மீதி உயிர் போகுமுன்னே

மீண்டு வருவாயா?
மீண்டும் வருவாயா?
மீட்க வருவாயா?
மீளாத் துயரத்தில்
மீனாய்த் துடிக்கின்றேன்
கரையினிலே.......


 

No comments:

Post a Comment