Monday, July 30, 2012

மெளன யுத்தம்



அறைமுழுவதும் அமைதியே ஆக்கிரமித்திருக்கிறது
அமைதியினால் ஆர்ப்பாட்டம் கொள்கிறது மனது
ஆர்ப்பாட்டக் குதிரையை அடக்க நினைக்க
பல வண்ண உணர்ச்சிகளைப் பூசிக் கொண்டு
ருத்ரதாண்டவம் ஆடுகிறது மனது.


தோல்வி கண்ட வீரனாய்
சரணடைகிறேன் மிச்சமில்லாமல்.
வெற்றிக் களிப்பில் வெறியாட்டம்
வேகத்துடன் அரங்கேறுகிறது.


போரிடும் எண்ணம் துறந்ததால்,
உணர்ச்சி வண்ணங்களில்
மூழ்கித் திளைக்கிறேன்.


காலடி ஓசை அறையின்
அமைதியை குலைக்க
ஆர்ப்பாட்ட மனது
அமைதியாகிறது. 

No comments:

Post a Comment