Thursday, July 26, 2012

உன் கைப்பிடித்து


இரும்பை இழுக்கும் காந்தமாய்
வார்த்தைகள் அடிமையாக
ஊமையாகிறது மொழி
உன்னிடத்தில்.
 
கோபமெல்லாம் விரும்பியே
தற்கொலை செய்கிறது
உன் அருகாமையில்.

மடி மீது தலைசாய்த்து நீ
துயிலுகையில் இன்னொரு
தாயாகிறேன் உனக்கு

குழிகள் நிரப்பும் நீரைப்போல்
என் குறைகளை நிறைகளாக்கி
பட்டை தீட்டுகிறாய் என்னை.

கைகாட்டும் திசையில்
கைகோர்த்து பயணிக்கிறேன்
கண்களில் இலட்சிய கனவோடும்
மனதினில் நிறைந்த நம்பிக்கையோடும்.

No comments:

Post a Comment