Thursday, July 26, 2012

நான்


வெந்ததைத் தின்று
விதியிடம் மண்டியிட்டு
சுடு சொற்களுக்கு துவண்டு
சிறைப் பட்டு வாழும்
கூண்டுக் கிளியல்ல நான்.........

சிறைகள் உடைத்து
புது பாதையமைத்து
சிறகுகள் விரித்து
பறக்கும் பட்டாம்பூச்சி நான்......

மேகம் கீறும் மின்னலாய்
தடைகள் உடைத்து
வெற்றிப் பயணம் தொடரும்
விந்தையான தேரை நான்........

இல்லாததில் ஆரம்பித்து
இமயம் வரை வளரும்
அதிசய மலர்கொடி நான்......

வெட்ட வெட்ட துளிர்விட்டு
வானம் வரை கூரை அமைத்து
விழி உயர்த்த வைக்கும்
அபூர்வ பிறவி நான்...............


No comments:

Post a Comment