Thursday, July 26, 2012

வெற்றுப்படகாக


 
மணல் துகள்களாய் மனதில்
ஆங்காங்கே படர்ந்திருந்த
வெறுமை கூட்டணியமைத்து
குன்று போல குவிய
கரைக்க முயல்கிறேன்
கண்ணீரால்.............

கண்ணீர் துளிகளில் கரையாமல்
மேலும் அடர்த்தியாகிறது வெறுமை.

மனதை வெறுமை முழுதும்
ஆக்கரமிக்க தனிமை தேடுகிறேன்
உறவாகிறேன் தனிமையிடம் மட்டும்

தனிமையின் துணையுடன் என்னுள்
ஆழ்ந்து உள்ளிரங்க.......
பறக்கின்றன மணல் துகள்கள்
காற்றினில் சுவடுகளே இல்லாமல்.

தாமரை இலைத் தண்ணீராய்
மனமும் தனித்தன்மை பெற
வாழ்க்கைப் பயணத்தில்
முயற்சிக்கிறேன் வெற்றுப்படகாக......

No comments:

Post a Comment