கண்ணிமைக்கும் நேரத்தில்
உளம் புகுந்து உயிருருக வைக்கும்
வித்தையை எங்கே கற்றாய்
என் வெட்கத்தை
மொழி பெயர்த்து
மெளனத்தால்
கவிதையெழுதுகிறாய்
மெல்லிய அணைப்பில்
பூத்த பூக்களெல்லாம்
எட்டிப் பார்க்கிறது உனைக்காண
வியர்வைத்துளிகளாய்.
துளிகள் ஒவ்வொன்றும்
மோட்சம் பெறுகின்றன
உன் ஒற்றைத் தீண்டலில்.
No comments:
Post a Comment