Thursday, July 26, 2012

அருமை மகனே


 
வாழ்க்கை கீதத்தின்
இன்னிசையே

வருடங்கள் பல ஓடினாலும்
முதல் நாள் மலர் கொத்தாய்
என்கையில் நீ சிரித்தது தான்
கண்முன்னே விரிகிறது
உன்னைப் பார்க்கும் பொழுதெல்லாம்.

உலகமே தன் வண்ணத்தை மாற்றிக் கொண்டதும்
மனம் அன்பெனும் அமுதம் குடித்ததும்
உன் வருகைக்கு பிறகு தான், செல்லமே.

வாழ்விற்கு பொருள் தந்தவன் நீ.
என் வாழ்விற்கு அச்சாணி நீ.
உனக்காய் உயிர் வாழவும்
உனக்காய் உயிர் துறக்கவும்
என்றும் சம்மதமே ...........

No comments:

Post a Comment