வாழ்க்கை கீதத்தின்
இன்னிசையே
வருடங்கள் பல ஓடினாலும்
முதல் நாள் மலர் கொத்தாய்
என்கையில் நீ சிரித்தது தான்
கண்முன்னே விரிகிறது
உன்னைப் பார்க்கும் பொழுதெல்லாம்.
உலகமே தன் வண்ணத்தை மாற்றிக் கொண்டதும்
மனம் அன்பெனும் அமுதம் குடித்ததும்
உன் வருகைக்கு பிறகு தான், செல்லமே.
வாழ்விற்கு பொருள் தந்தவன் நீ.
என் வாழ்விற்கு அச்சாணி நீ.
உனக்காய் உயிர் வாழவும்
உனக்காய் உயிர் துறக்கவும்
என்றும் சம்மதமே ...........
இன்னிசையே
வருடங்கள் பல ஓடினாலும்
முதல் நாள் மலர் கொத்தாய்
என்கையில் நீ சிரித்தது தான்
கண்முன்னே விரிகிறது
உன்னைப் பார்க்கும் பொழுதெல்லாம்.
உலகமே தன் வண்ணத்தை மாற்றிக் கொண்டதும்
மனம் அன்பெனும் அமுதம் குடித்ததும்
உன் வருகைக்கு பிறகு தான், செல்லமே.
வாழ்விற்கு பொருள் தந்தவன் நீ.
என் வாழ்விற்கு அச்சாணி நீ.
உனக்காய் உயிர் வாழவும்
உனக்காய் உயிர் துறக்கவும்
என்றும் சம்மதமே ...........
No comments:
Post a Comment