Thursday, July 26, 2012

வெறுமைப்படகை


மனதின் ஓரத்தில் நங்கூரம் போட்டு
அமர்ந்திருக்கும் வெறுமைப்படகை
வார்த்தை அலைகளால் அசைத்து
தள்ளிவிடப் முயல்கிறேன்.

அலைகளின் ஆட்டத்தில் அசைவதாய்
பாசாங்கு காட்டி விட்டு வெற்றிப்புன்னகை
சிந்துகிறது, இடத்தை விட்டு சிறிதும் அகலாமல்.

ஓய்ந்து போன அலைகள் தோல்வியை
ஏற்றுக் கொண்டு மெளனவிரதம் பூண்டன.
மெளனமே உணவாக வளர்ந்து முழுவதுமாய்
ஆக்கரமிக்கிறது மனதை வெறுமை.

சிறந்த மாலுமியாய் என்னுள் நீ வந்தாய்.
நங்கூரம் நீக்கும் வித்தை புரிபட
வாழ்க்கைப் பயணம் இனிதாய் தொடர்கிறது.

No comments:

Post a Comment