பள்ளம் நோக்கிப் பாயும் நதிபோல
உன்னைச் சுற்றியே வலம்
வருகின்றன என் சிந்தனைகள்.
நினைவுகளை மட்டுமே பரிசாய்
வாழ்க்கைப் பாதையில் விட்டுப்
போன உறவுகளுக்கிடையில்
எனக்காய் காத்திருக்கும் வரம் நீ.
முற்றுப் பெறாமலிருந்த வாழ்க்கை
முழுமையாவதை உணர்கிறேன்
உன் அருகாமையில்.........
உன் விழிதேடும் போது
வர இயலாமல் போனாலும்
துயரத்தில் தோள்கொடுக்கும்
முதல் ஆளாய் நானிருப்பேன்.
உன் நினைவுகளெனும் அமுதசுரபியால்
சாகாவரம் பெற்ற அன்போடு
புரிந்து கொள்வாயென மெளன
ஆடை பூண்கிறேன்.
உன்னைச் சுற்றியே வலம்
வருகின்றன என் சிந்தனைகள்.
நினைவுகளை மட்டுமே பரிசாய்
வாழ்க்கைப் பாதையில் விட்டுப்
போன உறவுகளுக்கிடையில்
எனக்காய் காத்திருக்கும் வரம் நீ.
முற்றுப் பெறாமலிருந்த வாழ்க்கை
முழுமையாவதை உணர்கிறேன்
உன் அருகாமையில்.........
உன் விழிதேடும் போது
வர இயலாமல் போனாலும்
துயரத்தில் தோள்கொடுக்கும்
முதல் ஆளாய் நானிருப்பேன்.
உன் நினைவுகளெனும் அமுதசுரபியால்
சாகாவரம் பெற்ற அன்போடு
புரிந்து கொள்வாயென மெளன
ஆடை பூண்கிறேன்.
விட்டில் பூச்சியாய் இரையாவாயா?
எல்லாம் தாண்டி என்னவனாய் வருவாயா?
விடைத் தெரியா வினாக்களோடு
காத்திருக்கிறேன் உனக்காக.........
No comments:
Post a Comment