Thursday, July 26, 2012

செல்லச் சண்டைகள்


கண்களில் காதலைத் தேக்கியபடி
மழைமேகமாய் அலைகிறேன்
உன் முகம் கண்டவுடன் பொழிய.

காட்டாற்று வெள்ளமாய் சீறும்
என் காதலில் நனைந்தபடி
கண்ணாம்பூச்சி ஆட்டம் ஆடுகிறாய்.

எனக்காய் வாடி, கண்டதும் ஓடும்
உன் விளையாட்டில்
துவண்டு தான் போகிறேன்.

துவண்டு விழுமுன் நீள்கிறது
உன் கைகள் எனையேந்த.
செல்லக் கோபத்துடன்
உன்னுள் புதைகிறேன்.

சண்டைகளுக்கு பின்
வெறுப்பு வெளிநடப்பு செய்ய
அன்பு மட்டுமே மனதை ஆள
அன்பாய் தொடர்கிறது சண்டைகள்.

No comments:

Post a Comment