Friday, July 20, 2012

மெளனமாகிய மொழி




நமக்கான மணித்துளிகளில்

அன்பை மட்டுமே இட்டு

நிரப்புகிறாய் குறைவேயில்லாமல்


திகட்டத் திகட்டத் திளைத்த பிறகு
மயான அமைதியாகிறது  மனம்.

அமைதியில் ஆழ்ந்து
மெளனப் பூக்களாய்
சிரிக்கிறது உன் நினைவுகள்


 நினைவுகளை அசைபோட
அழகிய காவியமாகிறாய்
என்னுள்ளே நீ


காவியத்தை எழுத்துக்களால்
உயிர்கொடுக்க எத்தனிக்க
குடத்துக்குள் அடங்கா கடல்போல
மொழிகளுக்குள் சிக்காமல்
நர்த்தனமாடுகிறது.


No comments:

Post a Comment