Thursday, July 26, 2012

பாசத்தின் அடிமை


கவிதைகளாய் விரல் வழி
கசியும் உன் மாசில்லா அன்பினை
துய்த்த பின் சொக்கித்தான்
போகிறேன் தேனுண்ட வண்டாய்.

என் சுதந்திரப் படகும்
தரைத்தட்டி நிற்கிறது
உன் பாசக் கடலில் அடிமையாய்.....

உன் பாதச்சுவடில்லாத பாதைகளும்
உன் வாசமில்லா பொருள்களும்
அந்நியமாகின்றன என்னிடத்தில்.

எதையோ தேடித் துவங்கிய
வாழ்க்கைத் தேடல் முற்றுப்பெறுகிறது
புதையலாய் நீ கிடைத்ததால்........

No comments:

Post a Comment